Posts

ஸ்ரீ கருணையானந்த சுவாமிகள் வரலாறு

Image
ஸ்ரீ கருணையானந்த சுவாமிகள் வரலாறு ஸ்ரீ பெரியமுத்து நாடாருக்கு அணைஞ்சபெருமாள் நாடார் என்ற கருணையானந்த சுவாமிகள் பிறந்தார். மங்கல்ரேவில் யோகிபுருடனின் வாக்கியப் பலிதமே என்று எண்ணலானார். மிக்க லட்சணமும், நல்ல தேஜஸும், அருள் அமைந்த கண்களும் அமையப்பெற்று பார்ப்போர் உள்ளம் கவரும் தோற்றத்துடன் விளங்கிய கருணையானந்தத்தின் திருமுக நிலா விலாசம் தாய், தந்தையரின் அகத்தின் கண்ணின்று எழும் ஆனந்தக் கடலைப் பொங்கித் ததும்பும்படி செய்தது. கருணையானந்தர் தமது தந்தையாரின் அகண்ட ஐஸ்வர்யப் பெருமையில் வளர்ந்து வருவதாயினர். சிறு தேருருட்டி தெருவில் நடை பயின்று சிறுவருடன் ஓடி விளையாடி வளர்ந்து வரும் பருவம் ஐந்து அடைந்தபின் சிறுவருடன் பாடசாலை சென்று படித்து வந்தார். நற்குணமும், தெய்வ பக்தியும், அடக்கவொடுக்கமும் அவரிடம் இயல்பாகவே வளர்ந்து வந்தன. சுமார் 12 வயதுக்குள் கற்க வேண்டியவைகளைக் கற்று தமது குலத்தொழிலாகிய வியாபார முயற்சிப் பழக்கச் சிற்றாள் முறையில் பேரையூர் கடை சென்று தொழில் பார்த்து வந்தார். சித்தர் தரிசனம் கருணையனந்தர் தம் 13வது வயதில் ஒரு நாள் கடையிலிருந்து மாலை வேளையில் சாலிசந்தைக்கு வந்து கொண்டிருக்கு...

சாலிச்சந்தை ஸ்ரீ பால்பழக்காரி அம்மன்

Image
சாலிச்சந்தை ஸ்ரீ பால்பழக்காரி அம்மன்                                                         வரலாறு ஆதி ஸ்ரீ அணைஞ்சபெருமாள் நாடாரின் சிரேஷ்ட குமாரர் ஸ்ரீ பெரியமுத்து நாடார் மங்கல்ரேவில் குடியிருந்து வியாபாரம், விவசாயம், கொடுக்கல் வாங்கல் முதலியன செய்து பொருளாதாரத்தில் விருத்தியடைந்திருந்த காலத்தில் தாம் அடிக்கடி வெளியூர் போவதுண்டு. அப்படிப்போகும் போகும் நாட்களில் அவரது தம்பி ஸ்ரீ மாரிமுத்து நாடார் குடும்ப காரியங்களையும், வியாபாரம் விவசாயங்களையும் மேற்பார்த்து வருவார். ஸ்ரீ பெரியமுத்து நாடார் காலப்போக்கு சூழ்நிலைகளை அனுசரித்து பேரையூர், சாலிச்சந்தை போன்ற ஊர்களுக்கு குடியேறுவதற்காகத் திட்டமிட்டு இருந்தார். அதற்கு மைக்கண் நாடான்குடி சென்று நமது குலதெய்வம் அணைஞ்ச பெருமாள் அய்யன் சுவாமியைத் தரிசித்து, உத்தரவு பெறும் நோக்கத்துடன், மாசி மாதம் திருச்செந்தூரில் உற்சவம் நடைபெறும் காலத்தில் ஒரு நாள், சகல காரியங்களையும் தன் தம்பி ஸ்ரீ மாரிமுத்து நாடாரிடம் ஒப்ப...

ஸ்ரீ குமரவிடங்க அய்யனார்

Image
மைக்கண் நாடான் குடியிருப்பு ஸ்ரீ குமரவிடங்க அய்யனார் கோவில் வரலாறு ஆதி அணைஞ்ச பெருமாள் நாடார் வம்ச குலதெய்வமாகிய ஸ்ரீ குமரவிடங்க அய்யனார் திருக்கோவில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம், சுகந்தலை ஊராட்சி, மைக்ககண் நாடான் குடியிருப்பு கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் திருநெல்வேலி - திருச்செந்தூர் மார்க்கத்தில் உள்ள குரும்பூரில் இருந்து சுமார் 2 கி.மீ அரத்திலும், தூத்துக்குடி - திருச்செந்தூர் மார்க்கத்தில் ஆத்தூருக்கு அடுத்தாற்போல் பேருந்துகள் ஐயன் கோவில் என்ற நிறுத்தத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் நமது கோவில் அமைந்துள்ளது. தூத்துக்குடியில் இருந்து ஏரல் செல்லும் பேருந்துகள் சில நமது கோவில் வழியாகச் செல்கிறது. குலதெய்வம் அருள்மிகு குமரவிடங்க அய்யனார் திருத்தலம் சுமார் 500 ஆண்டுகளுக்கு முந்தைய ஸ்தலம் என்று கிராமத்து பெரியவர்கள் கூறுகிறார்கள். நமது முன்னோர்கள் இந்தக் கோவில் உந்து சாமி கும்பிட்டு, சில காரியங்கள் செய்ய இந்தக் கோவிலில் உத்தரவு கேட்டு அதன்படி செய்திருக்கிறார்கள் என்பதனை நமது பங்காளிகள் வரலாற்றில் காணலாம். 1918க்குப் பிறகு நமது முன்னோர்கள் குலதெய்வம் கும்பிடுவதை நி...

ஆதி அணைஞ்ச பெருமாள் நாடார் வம்ச வரலாறு

முன்னுரை 1933ம் வருடத்தில் பெருநாளி ஸ்ரீ ஆ.குமரய்யா நாடாரும் தூத்துக்குடி ஸ்ரீ அ.சி.வாலசுப்பிரமணிய நாடாரும் சேர்ந்து தயார் செய்த கருணையானந்தர் சரித்திரம் கையெழுத்துப் பிரதியனின்று 'ஆதி அணைஞ்ச பெருமாள் நாடார் வம்ச' வரலாறு எடுக்கப்பட்டது. இச்சரித்திரம் இம்மகானைப் பற்றிக் கூறுவதுடன் ஆதி அணைஞ்ச பெருமாள் நாடார் வம்ச வரலாற்றைப் பற்றியும் கூறுகிறுது. 1960ல் இருந்த சுமார் 72 தலைக்கட்டுகள் கொண்ட அணைஞ்ச பெருமாள் நாடார் வம்சவகையறா ஒவ்வொரும் தலைக்கட்டும் எவ்வழியைச்சேர்ந்தது என்று அறிவதற்கு இச்சரித்திரம் உதவி புரிகின்றது அதன் வழி கொண்டு தற்சமயம் உள்ள 245 தலைக்கட்டுகள் வம்சாவழியுடன் தனியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஏதாவது தவறு இருந்தாலோ, திருத்தம் இருந்தாலோ சேர்க்க வேண்டியது இருந்தாலோ திரு.T.K.P.கந்தசாமி, 26, நாடார் உறவின்முறை பேட்டை, தேனி ரோடு, உசிலம்பட்டி - 625532. (செல்: 9943899254) என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம். 18-19வது நூற்றாண்டுகளில் பாண்டிய நாட்டில் நாடார்கள் இருந்து வந்து நிலையை அறிவதற்கும் இந்நூல் ஒரு சாதனமாகும். சிவகாசி, சாலிச்சந்தை, விருதுநகர் நாடார்கள் செய்து ...